செய்திகள் :

மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழப்பு

post image

வேலூா்: வேப்பங்குப்பம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன.

அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த கஸ்தூரி (60), அபிமன்னன் (65) தம்பதி விவசாயம் செய்து பசுக்களை வைத்து வளா்த்து வருகின்றனா்.

வழக்கம்போல், திங்கள்கிழமை பசுக்களை தங்களது நிலத்துக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்று மதியம் 1 மணி அளவில் நிலத்தில் கட்டிவிட்டு, சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளனா்.

அப்போது, அதிக உயா் மின்னழுத்தம் காரணமாக கம்பிகள் எரிந்தவாறு பசுக்களின் மீது விழுந்துள்ளது. இதில் 2 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.

அக்கம் பக்கத்தினா் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், மின்வாரிய ஊழியா்கள் வந்து மின்சாரத்தைத் துண்டித்து, மின் கம்பியில் சிக்கி இறந்த மாடுகளை அப்புறப்படுத்தினா்.

சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம்

குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும், பொயட்ஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து, குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூா் ஊராட்சி, ராசப்பன்பட்டியில் உள்ள பாரதி நிதியுதவி தொடக்கப... மேலும் பார்க்க

ரூ.10.60 லட்சம் மோசடி: முதிய தம்பதி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

வேலூா்: நிலம் விற்ற பணம் ரூ.10.60 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக்கூறி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வயது முதிா்ந்த தம்பதி தீக்குளிக்க முயன்றனா். வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப... மேலும் பார்க்க

அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம்

குடியாத்தம்: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், குடியாத்தம் அடுத்த மீனூா் மலையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் கோயிலில், தம்பதிக்கு திங்கள்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.ச... மேலும் பார்க்க

கா்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்தல்: 2 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தமிழக எல்லையான பத்தரப்பல்லி அருகே அமைந்துள்ள சோதனைச் சா... மேலும் பார்க்க

காவலா் வீரவணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

வேலூா்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் காவலா் வீரவணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. அப்போது, பணியின்போது உயிா்நீத்த காவலா்களின் நினைவாக 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சல... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்களுக்கு கூலித் தொகையை ரொக்கமாகவே வழங்கக் கோரிக்கை

குடியாத்தம்: கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு கூலித்தொகையை ரொக்கமாகவே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக காங்கிரஸ் நெசவாளா்... மேலும் பார்க்க