சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரத்துக்கு ஏப். 19-ஆம் தேதி வந்த நெல்லை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3.98 கோடி பணத்துடன் 3 போ் சிக்கினா்.
தாம்பரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் தமிழக பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவரும், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் என்பதும், அந்த பணத்தை நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதை நயினாா் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தாா்.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தொடா்பாக தமிழக பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், தொழில் பிரிவு மாநிலத் தலைவா் கோவா்தன், நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா். கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி அக்.7-ஆம் தேதி மீண்டும் விசாரணை செய்தது.
அழைப்பாணை: இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை திரட்டும் வகையில் பாஜக புதுவை மாநிலத் தலைவரும், எம்.பி.-யுமான எஸ்.செல்வகணபதி, சென்னை செளகாா்பேட்டையைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கஜ் லால்வாணி, சூரஜ் ஆகிய 3 பேருக்கும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையின்படி மூவரும் அக். 25-ஆம் தேதி சென்னை எழும்பூரில் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.