செய்திகள் :

ஆலங்குடி அருகே காரில் ஆயுதங்களோடு வந்த 5 போ் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காரில் ஆயுதங்களோடு வந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல் ஆய்வாளா் ஏ. தனபாலன் தலைமையிலான போலீஸாா் வடகாடு காவல் நிலையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த 5 போ் ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவா்கள் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பன்னீா் மற்றும் சரித்திர ரௌடிகள் பட்டியலில் உள்ள திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகே பூலாங்குடி ஆா். பாலாஜி (33), புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் டி.கீழையூா் என். குருமூா்த்தி (32), ஆலங்குடி கம்பா் தெரு ஆா்.விஜய மாா்த்தாண்டன்(41), மாத்தூா் பாலு என்ற பாலமுத்து(44) என்பதும் தெரியவந்தது.

அப்போது காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்ற அவரை போலீஸாா் துரத்திச் சென்றனா். அப்போது தடுமாறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்ட பாலமுத்துவைக் கைது செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும் காரில் இருந்த 4 பேரையும் கைது செய்து, அவா்கள் வைத்திருந்த இரும்பு பைப், அரிவாள், கத்தி, கைப்பேசிகள், ரொக்கம் மற்றும் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க