செய்திகள் :

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

post image

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திறப்பு விழா நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் ரூ. 72.08 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சுயஉதவிக் குழு கட்டடத்தையும்,

கல்லாக்கோட்டை ஊராட்சியில் ரூ. 23.57 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், நடுப்பட்டி ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், ஆத்தங்கரை விடுதி ஊராட்சியில் ரூ.39. 95 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி செயலக கட்டடம் மற்றும் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் உள்ளிட்ட மொத்தம் ரூ. 1 7 7.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.

திறப்பு விழாவில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப்ரசூல், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுவாமிநாதன், ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க

பணம் செலுத்தியும் இயந்திரம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பணம் செலுத்தியும் இயந்திரம் வழங்க மறுத்த சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை எஸ்எம... மேலும் பார்க்க