செய்திகள் :

இனி இலவச டயாலிசிஸ்: முதல் வாக்குறுதியை நிறைவேற்றிய நயாப் சைனி!

post image

ஹரியாணாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என்று முதல்வர் நயாப் சைனி அறிவித்தார்.

அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சைனி செய்தியாளர்களுடன் பேசினார். இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, பட்டியலின சாதிகளுக்குள் துணைப் பிரிவுகளை உருவாக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்று, இன்று முதலே மாநில அரசு செயல்படுத்தத் தொடங்கும்.

இதையும் படிக்க:வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

வியாழனன்று இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட சைனி, பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஹரியாணா மக்கள் காங்கிரஸ் ஏழைகளுக்கு அளித்த பொய்களை முறியடித்துள்ளனர்.

பாஜக கட்சிக்கு பெரும் ஆணை வழங்கியதன் மூலம், பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு மக்கள் ஒப்புதல் முத்திரை பதித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிஸ் சேவை வழங்கத் தொடங்கும். நான் பொறுப்பேற்றதும் என்னுடைய முதல் கையெழுத்து சிறுநீரக நோயாளிகள் தொடர்பான இலவச சிகிச்சைக்கு தான் என்றார்.

இதையும் படிக்க: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

தேர்தலிலும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தோம். டயாலிசிஸ் செய்ய மாதம் 20,000 முதல் 25,000 வரை செலவாகும். இனி, ஹரியாணா அரசே இந்த செலவுகளை ஏற்கும். அமைச்சரவை முடிவுகள் இன்று முதல் அமல்படுத்தப்படும்.

மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தங்கள் வழியைச் சீர்செய்ய வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது

பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷ... மேலும் பார்க்க

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு ரூ. 5 லட்சம் தருவதாக பெண்ணிடம் மோசடி: 4 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் பெண்ணை ஏமாற்றி நகையைப் பறித்த நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் அக். 12 ஆம் தேதியில் காலையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த 59 வயதுடைய பெண் ஒருவர... மேலும் பார்க்க

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன்

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 18 மாதங்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவையில் சு... மேலும் பார்க்க

பன்னுன் மீது கொலைமுயற்சி: இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா புகார்

அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ்வுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை 3 க... மேலும் பார்க்க

தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 45 ஐபோன்கள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த 45 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து தில்லி சுங்கத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "வாஷிங்டனில் இருந்து தில்லிக்கு ஏர் ... மேலும் பார்க்க