செய்திகள் :

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது

post image

பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ஹரியாணாவைச் சோ்ந்த குா்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தா்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை காவல் துறை, உடனடியாக கைது செய்தனர். பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

பாபா சித்திக்குக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டபோதிலும், அவா் சுட்டுக்கொல்லபட்டது விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்டை மாவட்டமான ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் கர்ஜத் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்த ஐந்து பேரும் குற்றம் தொடர்பான சதி மற்றும் அதை செயல்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனும் தொடர்பில் இருந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

ஆர்.ஜி. கர் மருத்துவமனை முறைகேடு: 6 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பண முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையதாக மேலும் 6 மருத்துவர்களை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் மு... மேலும் பார்க்க

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு ரூ. 5 லட்சம் தருவதாக பெண்ணிடம் மோசடி: 4 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் பெண்ணை ஏமாற்றி நகையைப் பறித்த நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் அக். 12 ஆம் தேதியில் காலையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த 59 வயதுடைய பெண் ஒருவர... மேலும் பார்க்க

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன்

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 18 மாதங்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவையில் சு... மேலும் பார்க்க

பன்னுன் மீது கொலைமுயற்சி: இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா புகார்

அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ்வுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை 3 க... மேலும் பார்க்க

தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 45 ஐபோன்கள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த 45 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து தில்லி சுங்கத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "வாஷிங்டனில் இருந்து தில்லிக்கு ஏர் ... மேலும் பார்க்க