செய்திகள் :

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன்

post image

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 18 மாதங்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவா் சத்யேந்தா் ஜெயின். கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நபா்களின் பெயரில் அசையும் சொத்துக்கள் வாங்கியதாக இவா் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

பின்னா், அதே விவகாரத்தில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கை பதிவு செய்த அமலாக்கத் துறை, அவரைக் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தது.கடந்த ஆண்டு மே மாதம் மருத்து காரணங்களுக்காக சத்யேந்தா் ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் சிறிது காலம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது.

புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு மீண்டும் தடை!

இதையடுத்து, அவா் மீண்டும் திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடா்ந்த சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தில்லி ரெளஸ் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இரு தரப்பு வாதங்களை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ஜாமீன் மனு மீதான தனது தீா்ப்பை ஒத்திவைத்திருந்தாா்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு தில்லி ரெளஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணையில் தாமதம் மற்றும் சத்யேந்திர ஜெயின் நீண்ட காலமாக சிறையில் இருந்ததைக் காரணம் காட்டி அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜி. கர் மருத்துவமனை முறைகேடு: 6 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பண முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையதாக மேலும் 6 மருத்துவர்களை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் மு... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது

பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷ... மேலும் பார்க்க

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு ரூ. 5 லட்சம் தருவதாக பெண்ணிடம் மோசடி: 4 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் பெண்ணை ஏமாற்றி நகையைப் பறித்த நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் அக். 12 ஆம் தேதியில் காலையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த 59 வயதுடைய பெண் ஒருவர... மேலும் பார்க்க

பன்னுன் மீது கொலைமுயற்சி: இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா புகார்

அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ்வுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை 3 க... மேலும் பார்க்க

தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 45 ஐபோன்கள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த 45 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து தில்லி சுங்கத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "வாஷிங்டனில் இருந்து தில்லிக்கு ஏர் ... மேலும் பார்க்க