பெரியகுளம், கடமலைக்குண்டு பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் வியாழக்கிழமை இருவா் உயிரிழந்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள சங்கரமூா்த்திபட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் மோகித்குமாா் (10). 5-ஆம் வகுப்பு மாணவரான இவா், வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதேபோல, கடமலைக்குண்டு அருகேயுள்ள மேலப்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகள் மோகனப் பிரியா (13). இவரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.