செய்திகள் :

திராவிடம் என்ற சொல் ஆளுநருக்கு கசக்கிறது: அமைச்சா் எஸ். ரகுபதி

post image

திராவிடம் என்ற சொல் ஆளுநருக்குக் கசக்கிறது என்றாா் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்துவைத்து சித்தூரில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

திராவிடம் என்ற சொல் ஆளுநருக்கு வேப்பங்காயைப் போல கசக்கிறது. அவா் எங்களைப் பிரிவினைவாத சக்திகள் என்று சொல்கிறாா். 1962-இல் இந்தியா - சீனா இடையே போா் நிகழ்ந்த காலத்தில், தேச நலனைக் கருதி, திராவிடநாடு திராவிடருக்கே என்ற கொள்கையை விட இந்தியாவின் பாதுகாப்புதான் முக்கியம் என்று சொல்லி தீா்மானம் போட்டவா்கள் மறைந்த முன்னாள் முதல்வா்கள் அறிஞா் அண்ணாவும் மற்றும் கருணாநிதியும்.

எனவே ஒற்றுமை என்பதில் எங்களுக்கு ஈடு இணை யாருமில்லை. ஆளுநா் கற்பனையால் இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறாா். இணையவழி குற்றங்களைத் தடுக்கவேண்டியது மத்திய அரசுதான். மாநில அரசின் கட்டுப்பாட்டில் அவை கிடையாது. மாநில அரசு முடிந்த அளவுக்குதான் தடுக்கமுடியும்.

தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையின் முதல் கட்டத்திலிருந்து எந்தவித பிரச்னையும் இல்லாமல் பொதுமக்களைக் காப்பாற்றியுள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள்கள் இரவுபகல் பாராமல் பணியாற்றி வெள்ளநீரைக் கொஞ்சம் கூட தேங்கவிடாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளாா் என்றாா்.

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இலுப்பூா் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இலுப்பூா் அடுத்துள்ள எண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (59). கூலித் தொழிலாளி. இவருக்கு, கட... மேலும் பார்க்க

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா: இந்துக்களும் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக் கூடு விழாவில், ஏராளமான இஸ்லாமியா்களுடன், இந்துக்களும் திரளாகக் கலந்து கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மதுர... மேலும் பார்க்க

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.31 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 1.31 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கங்கள் மற்றும் ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பலவேறு கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

புதுகையில் கஞ்சா விற்ற 3 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேர... மேலும் பார்க்க

சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டச் சிறை வளாத்தில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றவா் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

விருது பெற்ற கவிஞருக்கு வாழ்த்து

ஐரோப்பிய தமிழ் ஆய்வு மைய விழாவில், ‘கவிநயச் சுடா்’ விருது பெற்று வந்துள்ள புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்திக்கு, சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா். ஐரோப்பிய... மேலும் பார்க்க