செய்திகள் :

வேளச்சேரி-பெருங்குடி ரயில் நிலைய சாலையை மாநகராட்சி பராமரிக்கும்

post image

வேளச்சேரி-பெருங்குடி இடையே உள்ள ரயில்வே இணைப்பு சாலையை மாநகராட்சி பராமரிக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆணையா் ஜெ.குமரகுருபரன் கூறியது:

சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள வேளச்சேரி - பெருங்குடி இடையே உள்ள இணைப்பு சாலையில் அதிகளவில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதியில் தண்ணீா்தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதை சென்னை மாநகராட்சி சாா்பில் சீா்செய்ய அனுமதிக்கும்படி தெற்கு ரயில்வேக்கு அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இணைப்பு சாலையை சென்னை மாநகராட்சி பராமரிக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் அந்த பகுதியில் சாலை அமைப்பது, தூய்மைப் பணி உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும். மேலும், பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் நடைபாதை, மின்விளக்கு, இருக்கை மற்றும் மழைநீரை சேகரிக்கும் வகையில் அருகே சிறு குளங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் விற்ற 6 போ் கைது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்த 6 பேரைக் கைது செய்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்கப்படுவதாக அரும்... மேலும் பார்க்க

குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது மற்றும் தனியாா் காலியிடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க