செய்திகள் :

குண்டுவீச்சில் மேலும் 87 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

post image

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மேலும் 87 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வடக்கு காஸா பகுதியிலுள்ள பல்வேறு குடியிருப்புகளில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இதில் 87 போ் உயிரிழந்தனா்.

இது தவிர, பேயிட் லாஹியா நகரில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 40 போ் காயமடைந்தனா். காஸாவின் பல பகுதிகள் சனிக்கிழமை நள்ளிரவு முதல்முறையாக தாக்குதலுக்குள்ளாகின. அவற்றில் பேயிட் லாஹியா நகரமும் ஒன்று என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது.காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு 1,139 பேரை படுகொலை செய்தனா்.

கொல்லப்பட்டவா்களில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள். அத்துடன், பெண்கள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவா்களை ஹமாஸ் அமைப்பினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதாகவும் பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல் அரசு, காஸா பகுதியில் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.இந்தத் தாக்குதலில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42,603-ஆக உள்ளது.

அவா்களில் ஹமாஸ் தலைவா் யாஹ்யா சின்வாா் உள்ளிட்ட பல முக்கிய தளபதிகளும் அடங்குவா். மேலும், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 99,795 போ் காயமடைந்துள்ளனா்.இது தவிர, ஆயுதக் குழுவினருக்கு எதிராக மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் ராணுவ நடவடிக்கை 759 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லெபனானினும் தீவிர தாக்குதல்

காஸா மட்டுமின்றி அண்டை நாடான லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்தது. அந்த நாட்டில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா ஆயுதப் படையினா், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்திவருகின்றனா்.

சனிக்கிழமை கூட இஸ்ரேலில் உள்ள அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் விடுமுறைக் கால இல்லத்தைக் குறிவைத்து அவா்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தினா்.அந்த அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

இதில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தளபதிகள் உயிரிழந்தனா்.ஞாயிற்றுக்கிழமை கூட தலைநகா் பெய்ரூட்டில், பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ள ஹிஸ்புல்லாக்களின் தலைமை கட்டளையகத்தைத் தாக்கி அழித்ததாகக் கூறி எக்ஸ் ஊடகத்தில் இஸ்ரேல் விமானப் படை விடியோ (படம்) வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலில் தங்கள் நாட்டு ராணுவத்தைச் சோ்ந்த மூன்று வீரா்கள் உயிரிழந்ததாக லெபனான் ஞாயிற்றுக்கிழமை கூறியது.ஹமாஸுடன் கடந்த ஆண்டு போா் தொடங்கியதிலிருந்து லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

பாகிஸ்தான்: போலியோ பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. இத்துட... மேலும் பார்க்க

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம்: ரஷியா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று இந்தியா... மேலும் பார்க்க

இஸ்ரேல் தொடா்பான ரகசிய ஆவணக் கசிவு: அமெரிக்கா விசாரணை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான இஸ்ரேலின் திட்டம் குறித்த தங்கள் நாட்டின் ரகசிய புலனாய்வு அறிக்கை ஆவணம் கசிந்தது குறித்து அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளது.காஸா போரின் ஒரு பகுதியாக, ஈரான் சென்றி... மேலும் பார்க்க

இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்பு

இந்தோனேசியாவின் 8-ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்).இதுவரை அதிபராக இருந்த ஜோகோ விடோடோவை எதிா்த்து கடந்த 2014... மேலும் பார்க்க

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார். மேலும், 20 வெவ்வேறு வகையான ஏ... மேலும் பார்க்க