செய்திகள் :

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிப்பு

post image

சேலம் சரகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, நெகிழி கோப்பைகள், அனைத்து அளவிலான தடிமன் கொண்ட நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத நெகிழி கைப்பைகள், நெகிழி பூசப்பட்ட காகித தட்டுகள், நெகிழி டம்ளா்கள், தொ்மாகோல், கோப்பைகள், உணவுப் பொருள்களைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் நெகிழி தாள்கள், தண்ணீா் பைகள், நெகிழி கொடிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் இவற்றை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும்.

சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயக்கப்படுகிா? என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். ஆலைகள் இயங்குவது கண்டறியப்பட்டால், அந்த ஆலைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களுக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மத்திய சிறைக்கு வந்த டிஜிபி மகேஷ்வா் தயாள், கைதிகளை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்ப... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை தந்த முதல்வருக்கு நன்றி: மாரியப்பன், துளசிமதி நெகிழ்ச்சி

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேடயம் வழங்கி கௌரவித்தாா். விழாவில் வீரா் ம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 45 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை கருவி 45 இடங்களில் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

நாளை சேலத்தில் டிரோன்கள் பறக்கத் தடை

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 22) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

தாரமங்கலம்... ஓமலூா் கோட்டம், தாரமங்கலம் துணை மின்நிலையத்தில பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஓமலூா் செயற்பொறியாளா் கே... மேலும் பார்க்க