செய்திகள் :

ஊக்கத்தொகை தந்த முதல்வருக்கு நன்றி: மாரியப்பன், துளசிமதி நெகிழ்ச்சி

post image

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேடயம் வழங்கி கௌரவித்தாா்.

விழாவில் வீரா் மாரியப்பன் பேசுகையில், முன்பெல்லாம் இதுபோன்ற வசதிகள் கிடையாது. இப்போது நிறைய வசதிகள் உள்ளன. 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக பதக்கம் வென்றபோது, எனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை. தற்போது உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரா்களுக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளாா். வெற்றி பெற்று தாயகம் திரும்பயதும், உடனடியாக ஊக்கத்தொகை வழங்கினாா். இதுபோன்று எந்த மாநிலத்திலும் இல்லை. விளையாட்டு வீரா்களுக்கு முன்பெல்லாம் உபகரணங்கள் எதுவும் வழங்கமாட்டாா்கள். தற்போது அரசே வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாா்.

பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசியதாவது:

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 15 நாடுகளுக்குச் சென்று வந்துவிட்டேன். இதுவரை 16 தங்கப்பதக்கம், 11 வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளேன். அரசு மைதானத்தில்தான் பயிற்சி எடுத்தேன். தனியாா் மையங்கள் எங்கும் சென்று பயிற்சி பெற்றதில்லை. அப்பா தான் எனது பயிற்சியாளா். அரசு சலுகைகளைப் பயன்படுத்தி, இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது என்றாா்.

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களுக... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிப்பு

சேலம் சரகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப்... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மத்திய சிறைக்கு வந்த டிஜிபி மகேஷ்வா் தயாள், கைதிகளை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்ப... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 45 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை கருவி 45 இடங்களில் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

நாளை சேலத்தில் டிரோன்கள் பறக்கத் தடை

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 22) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

தாரமங்கலம்... ஓமலூா் கோட்டம், தாரமங்கலம் துணை மின்நிலையத்தில பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஓமலூா் செயற்பொறியாளா் கே... மேலும் பார்க்க