செய்திகள் :

Kashmir: தீவிரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; உமர் அப்துல்லா, நிதின் கட்காரி சொல்வதென்ன?

post image

நேற்று இரவு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரில் ஶ்ரீநஜர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதில் பணிபுரிபவர்கள் வேலையை முடித்துவிட்டு, நேற்று (அக்டோபர் 20) இரவு தங்களது இருப்பிடத்திற்குத் திரும்பியுள்ளனர். அப்போது அந்த இருப்பிடத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உள்ளூர் மருத்துவர் உள்ளிட்ட வெளியூரைச் சேர்ந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சோனாமார்க் பகுதியில் உள்ள ககன்கீரில் வெளியூர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர மற்றும் கோழைத்தனமான தாக்குதல் வருத்தத்தை அளிக்கிறது. இவர்கள் அந்தப் பகுதியின் மிக முக்கிய உள்கட்டமைப்பு பணியில் பணியாற்றி வந்தவர்கள்.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2-3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆயுதம் இல்லாத மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, "ஜம்மு காஷ்மீர், சோனாமார்க், ககன்கீர் பகுதியில் மிக முக்கியமான உள்கட்டமைப்பு பணியில் பணியாற்றிய அப்பாவி தொழிலாளர்கள் மீது நடந்துள்ள பயங்கரமான தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை தான், காஷ்மீரின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் உமர் அப்துல்லா. இந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளதையொட்டி, அவரிடம் எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், காஷ்மீரைப் பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு துணைநிலை ஆளுநரின் கீழ் வருகிறது. இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு என்ன பதிலடி தரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Trump: 'பிரெஞ்ச் ஃபிரைஸ் செய்த டிரம்ப்' - அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நூதனப் பிரசாரம்! | Video

'தேர்தல் வந்துட்டாப் போதும்... சின்ராசை கையில புடிக்க முடியாது' என்பதுபோல நம்மூர் வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளப் பல வித்தியாசமான பிரசார யுத்திகளில் இறங்குவார்கள். அதில் ஒன்றுதான் சமையல். அதாவது, அவரவர்... மேலும் பார்க்க

Canada-India: "ஆதாரத்தை இன்னும் கொடுக்கவில்லை.." - கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் பதில்

சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வந்த இந்திய - கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, கடந்த வாரம் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக இன்னும் மோசமாகியுள்ளது.கனடாவில் காலிஸ்தான் டைகர் பட... மேலும் பார்க்க

Andhra: "இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குத்தான்.." - சந்திரபாபு நாயுடுவின் அடுத்த திட்டம்!

உலக நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. இந்நிலையில், 2023-ல் UNFPA -இன் உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தியது. சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையை ... மேலும் பார்க்க

பேரழிவுகாரன் முசோலினி சந்தித்த துரோகங்கள் - வரலாற்று தொடர்! | History | Mussolini Web series #5

'முசோலினி' ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் வில்லனாகவும் பார்க்கப்படுகின்ற ஒருவர். உண்மையிலேயே முசோலினி என்பவர் யார்? அவர் சிங்கமா... ஆடா?! அவருடைய ஒட்டுமொத்தமான வாழ்க்கை வரலாறையும், நம்முடைய 'ஜ... மேலும் பார்க்க

துணை முதல்வர் நிகழ்ச்சி நடந்த இடத்தில், பைக்கில் வட்டமடித்து சத்தமிட்ட தவெக-வினர்... சேலம் சலசலப்பு!

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி... மேலும் பார்க்க