செய்திகள் :

ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 17 வயது சிறுவன் கைது! - நடந்தது என்ன?

post image

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டுவரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான தகவலில், ``இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் மற்றும் அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட சுமார் 32 இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு விமான நிலையங்களில் அவசர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியிலிருந்து லண்டன் செல்லும் யுகே 17 என்ற விஸ்டாரா விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. 2 மணி நேர சோதனைக்குப் பிறகு லண்டனுக்கு மீண்டும் பயணத்தை தொடங்கியது. மற்ற விமானங்களுக்கான சோதனை, அந்த விமானங்கள் அதன் இலக்கை அடைந்தப்பிறகே மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகே அவை அனைத்தும் புரளி என்பது கண்டறியப்பட்டது. கிடைத்த மிரட்டல்கள் அனைத்தும், கழிவறைகள், சமூக வலைதளங்கள், இமெயில் போன்றவைகள் வழியே விடப்பட்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) விமான நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் டெல்லியில் ஒரு சந்திப்பை நடத்தியது. BCAS -ன் டைரக்டர் ஜெனரல் சுல்பிகர் ஹசன், ``இந்திய வானம் முற்றிலும் பாதுகாப்பானது. பாதுகாப்பு நெறிமுறைகள் மிக கவனமாக, வலுவாக பின்பற்றப்படுகிறது. பயணிகள் எந்தவித அச்சமும் இல்லாமல் பயணிக்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.

விமானம்

இதுபோன்று மிரட்டல் விடுக்கும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணிக்க தடைவிதிக்கும்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, தன் பிஸ்னஸ் பார்ட்னரை பழிவாங்கும் நோக்கில், சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது சிறுவன் 19 வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற மிரட்டல்கள் குறித்த ஆதாரங்கள் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

டேட்டிங் ஆப்பில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்... விசாரணையில் அம்பலம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; கிராம மக்களிடம் சிக்கிய மின் வாரிய ஊழியர் கைது!

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர். அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் அந்த பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு... மேலும் பார்க்க

சப் கலெக்டர் தற்கொலை விவகாரம்; லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய பஞ்சாயத்து தலைவி மீது வழக்கு!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியைச் சேர்ந்த நவீன் பாபு, கண்ணூர் மாவட்ட சப் கலெக்டராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி மஞ்சுஷா பத்தனம்திட்டா கோனி தாசில்தாராக பணிபுரிந்துவருகிறார்.... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: 700 துப்பாக்கிச்சூடு கொலையாளிகள்; சிறைக்குள்ளிருந்தபடியே கட்டுப்படுத்தும் லாரன்ஸ்!

அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரைச் சுட்டு வீழ்த்திய நபர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற... மேலும் பார்க்க

கண் இமைக்கும் நேரத்தில் சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை; கதறிய தாய்... வால்பாறையில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளி... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: சல்மான் கானை கொல்லத் துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் - யார் இந்த கேங் லீடர்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான்26 வருடங்களுக்கு முன்பு, செய்த தவறு, இப்போதுஅவரை துப்பாக்கிமுனையில்துரத்திக் கொண்டு இருக்கிறது. 1998-ல் ராஜஸ்தான் மாநிலம்,ஜோத்பூரில் 2 மான்களை சல்மான் கான் வேட்டையாடிய சம்ப... மேலும் பார்க்க