செய்திகள் :

கண் இமைக்கும் நேரத்தில் சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை; கதறிய தாய்... வால்பாறையில் அதிர்ச்சி!

post image

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளிகளும் பணியாற்றி வருகின்றனர்.

வால்பாறை

அதன்படி அனில் அன்சாரி என்பவர் அங்கு தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி பெயர் நசீரான்.

இவரும் கணவருடன் இணைந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு அப்சரா என்ற நான்கு வயது மகள் உள்ளார்.

அப்சரா

இவர்கள் கடந்த ஓராண்டாக ஊசி மலையில் தங்கி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை மதியம் சிறுமி தன் அம்மாவுடன் இருந்துள்ளார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை வாயில் கவ்வி காட்டு பகுதிக்குள்  இழுத்துச் சென்றுவிட்டது. அம்மாவின் கூச்சல் சத்தம் கேட்டு வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிறுமியின் உடல் சடலமாக

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்ததில், சிறுமியின் உடல் சடலமாக கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், நேற்று மதியம் நசீரான் தன் மகள் அப்சராவை அழைத்துக் கொண்டு எஸ்டேட் பகுதியில் காய்கறி பறிக்க சென்றுள்ளார். அப்சராவை ஒரு இடத்தில் அமர சொல்லிவிட்டு நசீரான் சென்றுள்ளார். அப்போதுதான் சிறுத்தை திடீரென்று வந்து தாக்கியுள்ளது.

சிறுத்தை

அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட்டது. சிறுத்தையை கண்காணிக்க கேமராக்கள் அமைத்தும், தனிப்படை உருவாக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளதாக வனத்துறை கூறியுள்ளது.

Lawrence Bishnoi: 700 துப்பாக்கிச்சூடு கொலையாளிகள்; சிறைக்குள்ளிருந்தபடியே கட்டுப்படுத்தும் லாரன்ஸ்!

அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரைச் சுட்டு வீழ்த்திய நபர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: சல்மான் கானை கொல்லத் துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் - யார் இந்த கேங் லீடர்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான்26 வருடங்களுக்கு முன்பு, செய்த தவறு, இப்போதுஅவரை துப்பாக்கிமுனையில்துரத்திக் கொண்டு இருக்கிறது. 1998-ல் ராஜஸ்தான் மாநிலம்,ஜோத்பூரில் 2 மான்களை சல்மான் கான் வேட்டையாடிய சம்ப... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க