செய்திகள் :

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

post image
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்றக் கட்சியைத் தொடங்கி 8 மாதங்கள் ஆனா நிலையில் பொதுவெளியில் கட்சியின் கொள்கைகள் குறித்துப் பேசவிருக்கிறார்.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு பல தடைகளைக் கடந்து நடக்கவிருக்கும் மாநாட்டை எவ்வித குழறுபடியும் இல்லாமல் நடத்தி முடிப்பதே தவெக நிர்வாகிகளுக்கு இப்போது இருக்கக் கூடிய முக்கிய டாஸ்க்.

தொண்டர்களுக்கான அறிவுறுத்தலுடன் விஜய் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், "நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.

அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.

அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.

மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தவெக தலைவர் விஜய் அறிக்கை

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.

கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.

ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்." என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்.

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார்,... மேலும் பார்க்க

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.லூப் லைனில் நின்று கொண்டிருந்... மேலும் பார்க்க

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க

"திமுக-விற்கு சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ உரிமை இல்லை!" - ராமதாஸ்

கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அற... மேலும் பார்க்க

Israel : `ஹெஸ்பொல்லா, மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது' - ட்ரோன் தாக்குதலுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டில் ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், ஹெஸ்பொல்லா 'மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது' என்று எச்சரித்துள்ளார் நெதன்யாகு.சனிக்கிழமை தொடங்கி தெற்க... மேலும் பார்க்க