செய்திகள் :

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

post image
சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார், செல்வப்பெருந்தகை' என புது சர்ச்சையும் வெடித்துக் கிளம்பியிருக்கிறது!

இது குறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்புக்கு வந்த கையோடு முன்னாள் மாநிலத் தலைவர்களின் ஆதரவாளர்களை ஓரம்கட்டி வருகிறார். இது நிர்வாகிகள் பலரைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் ஒருபடி மேலே சென்றவர் அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு தனக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது எனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அதாவது சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கடந்த 19.9.2024 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றியமைப்பதற்கு செல்வப்பெருந்தகைக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் தலைமை கண்டுகொள்ளவில்லை.

செல்வப்பெருந்தகை

அந்த தீர்மானத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தனது ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டியிருக்கிறார். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 77 கட்சி மாவட்டங்கள் இருக்கின்றன. இதில், தென்சென்னை மேற்கு ஈஸ்வர பிரசாத், காஞ்சிபுரம் அளவூர் நாகராஜன், திருநெல்வேலி கிழக்கு கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர். முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு கே.எஸ்.அழகிரி மீது ஏற்பட்ட அதிருப்தியால் தூத்துக்குடி வடக்கு காமராஜ், ராமநாதபுரம் செல்லத்துரை ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர், எஸ்.சி, எஸ்.டி பிரிவின் மாநில தலைவர் என இரண்டு பதவிகளில் ரஞ்சன்குமார் இருந்தார். அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பதால் பெருந்தகை பதவிக்கு வந்ததும் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து ரஞ்சன்குமாரை நீக்கினார். இதனால் ஏழு இடங்களில் மாவட்ட தலைவர் பதவிகள் காலியாக இருக்கின்றன. இங்கெல்லாம் தனது ஆதரவாளர்களைக் கொண்டுவரப் பெருந்தகை முயன்று வருகிறார். இதேபோல் சென்னை, திருச்சி, விருதுநகர், வேலூர் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தனது ஆதரவாளர்களைக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார். இதனால் கட்சியில் பெரிய பிரச்னை வெடிக்கும்" என்றனர்.

இனியன் ராபர்ட்

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் இனியன் ராபர்ட்டிடம் விளக்கம் கேட்டோம், "தலைவர் செல்வப்பெருந்தகை பதவிக்கு வந்தது முதல் கோஷ்டி அரசியல் செய்யாமல் இருக்கிறார். அவரது ஆதரவாளர்களுக்கு எந்த முக்கிய பதவியும் கொடுக்கவில்லை. பிற அணிகளைச் சேர்ந்தவர்கள்தான் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதனடிப்படையில் தகுதியானவர்களுக்குப் பதவி வழங்கப்படும்" என்றார்.

துணை முதல்வர் நிகழ்ச்சி நடந்த இடத்தில், பைக்கில் வட்டமடித்து சத்தமிட்ட தவெக-வினர்... சேலம் சலசலப்பு!

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: தமிழருக்கு மீண்டும் வாய்ப்பு; 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ப... மேலும் பார்க்க

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.லூப் லைனில் நின்று கொண்டிருந்... மேலும் பார்க்க

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ... மேலும் பார்க்க

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க