செய்திகள் :

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்! சந்திரபாபு நாயுடு

post image

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை மற்றும் நாட்டின் மக்கள்தொகை சமநிலையை கருத்தில் கொண்டு அதிக குழந்தைகளை மக்கள் பெற்றுக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதி வளர்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் மக்கள்தொகை விகிதம் குறித்து கவலைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

அப்போது அவர் பேசியதாவது:

“ஜப்பான், சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையில் அதிகளவிலான வயதானவர்கள் உள்ளதால் விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரத்தில் மக்கள்தொகையில் வயதானவர்கள் அதிகரிக்கும் அறிகுறிகள் பிரச்னை எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2047 வரை மக்கள்தொகையில் சமநிலையை தக்க வைத்துக் கொண்டாலும், தென் மாநிலங்களின் மக்கள்தொகை விளைவுகளை சந்திக்க தொடங்கிவிட்டன.

கிராமங்களில் இருந்து இளைஞர்கள் வெளியேறி, வேலைவாய்ப்பை தேடி நகரங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். இதனால் கிராமங்களில் முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

தேசிய கருவுறுதல் சராசரியான 2.1-ஆக இருக்கும் நிலையில், தென் மாநிலங்களில் மிகவும் குறைவாக 1.6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இது தொடர்ந்தால், 2047-க்குள் ஆந்திரம் கடுமையான முதுமைப் பிரச்னையை சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்க, நாம் இப்போது இருந்தே செயல்பட வேண்டும்.

இதனால், ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறோம்.

இந்த நடவடிக்கையானது, மக்கள் அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதாகும். வரும் காலங்களில் துடிப்பான அதிகளவிலான இளைஞர்கள் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டதாகும்” எனத் தெரிவித்தார்.

தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்... மேலும் பார்க்க

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரே ஒருவர் விளையாட்டுக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம்.அண்மையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப... மேலும் பார்க்க

சாலை விபத்து: உயிரிழப்பில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்!

நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.ஆனால், சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதா... மேலும் பார்க்க

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர... மேலும் பார்க்க

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனச... மேலும் பார்க்க

புது வகை ஆன்லைன் மோசடி! ரூ. 60 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி! எப்படி நடந்தது?

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி 'இணையவழி கைது' எனும் ஆன்லைன் மோசடியால் ரூ. 60 லட்சத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி ஆன்லைன் பண மோசடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்... மேலும் பார்க்க