செய்திகள் :

சாலை விபத்து: உயிரிழப்பில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்!

post image

நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆனால், சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும், சாலை விபத்துகளில் கிட்டத்திட்ட 1.73 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். சராசரியாக ஒரு நாளொன்றுக்கு 474 பேரும், ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்த தொடங்கியதில் இருந்து, கடந்தாண்டே அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்தாண்டு சாலை விபத்துகளில் 4.63 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இது 2022-ஐ ஒப்பிடுகையில் 4 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1.68 லட்சம் பேர் உயிரிழந்ததாக சாலைப் போக்குவரத்து அமைச்சகமும், 1.71 லட்சம் பேர் உயிரிழந்ததாக தேசிய குற்றப் பதிவு ஆணையமும் அறிக்கை வெளியிட்டிருந்தன. 2023-க்கான அறிக்கையை இதுவரை இரு துறைகளும் வெளியிடவில்லை.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கடந்த 5 ஆண்டுகள் தரவுகளை ஒப்பிடுகையில், கரோனா ஊரடங்குக்கு பிறகு 2021ஆம் ஆண்டு முதல் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

2021-ல் 4.12 லட்சம் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், 1.54 லட்சம் உயிரிழப்பும், 3.84 லட்சம் பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளன. 2023-ல் 4.8 லட்சம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 1.73 லட்சம் உயிரிழப்பும், 4.63 லட்சம் பேர் காயமும் அடைந்துள்ளனர்.

இதில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023ஆம் ஆண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

அதேவேளையில், கேரளம், ஆந்திரம், பிகார், தில்லி மற்றும் சண்டீகரில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்தாண்டு குறைந்துள்ளன.

தமிழகம் இரண்டாமிடம்

உத்தரப் பிரதேசத்தில் 23,652 பேரும், தமிழகத்தில் 18,347 பேரும், மகாராஷ்டிரத்தில் 15,366 பேரும் சாலை விபத்துகளால் கடந்தாண்டு உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம்(72,292) முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம்(55,769) மற்றும் கேரளம்(54,320) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

இதையும் படிக்க : ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

தலைக்கவசம் அணியாத 70% பேர் மரணம்

2023-ஆம் ஆண்டில் விபத்தில் உயிரிழந்தவர்களில் கிட்டத்திட்ட 76,000 பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். அவர்களின் 70 சதவிகிதம் பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நகர்ப்புற வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைப்பதை கட்டாய விதிமுறையாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறைத்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.

போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துற... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கை கையாள பாஜகவால் இயலவில்லை: ஆம் ஆத்மி

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகச் சாடியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியது, மக்களைக் குறிவைத... மேலும் பார்க்க

தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்... மேலும் பார்க்க

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரே ஒருவர் விளையாட்டுக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம்.அண்மையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப... மேலும் பார்க்க

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர... மேலும் பார்க்க

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனச... மேலும் பார்க்க