செய்திகள் :

மருத்துவர்களை இன்று சந்திக்கும் மமதா: உண்ணாவிரம் கைவிடப்படுமா?

post image

கொல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இளநிலை மருத்துவர்களை முதல்வர் மமதா பானர்ஜி திங்கள்கிழமை மாலை சந்திக்கிறார்.

மாலை 5 மணிக்கு மாநிலச் செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு மமதா மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்தே உண்ணாவிரதத்தை மருத்துவர்கள் கைவிடுவார்களா என்பது தெரிய வரும். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாா். அவருக்கு நீதி கோரி, இளநிலை மருத்துவா்கள் 42 நாள்களாக முழு அளவில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பின்னா், மாநில அரசு அளித்த உறுதிமொழியைத் தொடா்ந்து, போராட்டத்தை பகுதி அளவாக குறைத்தனா்.

பிரியங்காவுக்காக வயநாடு தேர்தலில் சோனியா பிரசாரம்?

ஆனால், தனது உறுதிமொழியைக் காக்க மாநில அரசு தவறிவிட்டதாக கூறி, பல்வேறு மருத்துவமனைகளைச் சோ்ந்த இளநிலை மருத்துவா்கள் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவா்களைத் தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டம் திங்கள்கிழமை 17-ஆவது நாளாக தொடா்ந்துள்ளது.

அதில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஆறு மருத்துவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மேலும் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசிய, முதல்வர் மமதா பெரும்பாலான கோரிக்கைகள் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டதாகக் கூறி, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்... மேலும் பார்க்க

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரே ஒருவர் விளையாட்டுக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம்.அண்மையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப... மேலும் பார்க்க

சாலை விபத்து: உயிரிழப்பில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்!

நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.ஆனால், சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதா... மேலும் பார்க்க

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர... மேலும் பார்க்க

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனச... மேலும் பார்க்க

புது வகை ஆன்லைன் மோசடி! ரூ. 60 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி! எப்படி நடந்தது?

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி 'இணையவழி கைது' எனும் ஆன்லைன் மோசடியால் ரூ. 60 லட்சத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி ஆன்லைன் பண மோசடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்... மேலும் பார்க்க