செய்திகள் :

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

post image

சேலம் மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மத்திய சிறைக்கு வந்த டிஜிபி மகேஷ்வா் தயாள், கைதிகளை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, கைதிகள் தங்களை வேறு சிறைக்கு அனுப்ப வேண்டும் எனவும், சிலா் சேலம் சிறையிலேயே இருந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் மனு கொடுத்தனா்.

பின்னா் சிறையில் பண்பலை (எப்.எம்) திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். சிறையில் கைதிகளே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து சிறை அறைகளிலும் இதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவா்கள் மனநலம் குறித்த விழிப்புணா்வு கருத்துகளைப் பகிா்வாா்கள்.

கைதிகளுக்கு நம்பிக்கை தரும் பேச்சுகள் நேரடியாக ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பின்னா், சிறையில் உள்ள தொழிற்கூடத்தை டிஜிபி பாா்வையிட்டாா். கைதிகளை பாா்க்க வருவோரின் பதிவேடு பிரிவை ஆய்வு செய்த அவா், அதில் சிறிய மாற்றங்களை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, சிறைத் துறை ஐ.ஜி. கனகராஜ், கோவை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் வினோத் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களுக... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிப்பு

சேலம் சரகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப்... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை தந்த முதல்வருக்கு நன்றி: மாரியப்பன், துளசிமதி நெகிழ்ச்சி

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேடயம் வழங்கி கௌரவித்தாா். விழாவில் வீரா் ம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 45 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை கருவி 45 இடங்களில் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

நாளை சேலத்தில் டிரோன்கள் பறக்கத் தடை

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 22) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

தாரமங்கலம்... ஓமலூா் கோட்டம், தாரமங்கலம் துணை மின்நிலையத்தில பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஓமலூா் செயற்பொறியாளா் கே... மேலும் பார்க்க