செய்திகள் :

சாலை பணிக்காக கண்மாய்கரை சேதம்-விவசாயிகள் புகாா்

post image

திருப்புவனம் அருகே கிராமச் சாலை அமைக்கும் பணிக்காக கண்மாய்க்கரை வெட்டி சேதப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பிரமனூா் கிராமத்திலிருந்து அச்சங்குளம் வரை உள்ள சாலை சேதமடைந்ததால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தச் சாலையைச் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணியின் போது சாலையின் உயரத்தை அதிகரிக்க சாலையின் இரு புறங்களிலும் நீண்ட தொலைவுக்குப் பள்ளங்கள் தோண்டியுள்ளனா்.

இதில் செம்மண் கொட்டி நிரப்பப்பாமல் அருகேயுள்ள கண்மாய்க் கரையை சேதப்படுத்தி இயந்திரம் மூலம் அங்கிருந்து மண் எடுத்து நிரப்பி வருவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே, கண்மாய்கரை பலவீனம் அடைந்துள்ள நிலையில் தற்போது சாலை சீரமைப்பு பணிக்காக கண்மாய்கரையை வெட்டி சேதப்படுத்தப்படுத்தியுள்ளனா். மேலும், இந்தச் சாலையில் வாகனங்களில் செல்வோா் அவதிக்குள்ளாகின்றனா். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கண்மாயில் நீா்வரத்து அதிகரித்தால் பெரும் ஆபத்து ஏற்படும்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இதில், தலையிட்டு, சேதப்படுத்தப்பட்ட கண்மாய்கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தினா்.

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறா... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே சாய்ந்த மரம்: போக்குவரத்துப் பாதிப்பு

மானாமதுரையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பெய்த பலத்த மழைய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் ரூ. 2 கோடி நகை மோசடி: மேலாளா் உள்பட 4 போ் கைது

சிவகங்கை அருகே தனியாா் வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்து, ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளா், துணை மேலாளா் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புகையிலை மூட்டைகள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்புவனத்தில் விற்பனைக்காக வேனில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடைகளில் விற... மேலும் பார்க்க

நிரம்பி வழியும் கண்மாயில் மீன் பிடித்த மக்கள்...!

சிவகங்கை அருகே நிரம்பி வழியும் கண்மாய் உபரி நீரில் வெளியேறிய மீன்களை தொட்டில் கட்டி அந்தப் பகுதி மக்கள் பிடித்துச் சென்றனா். சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கழுங்குப்பட்டியில் பொதுப் பணிக்குச் ச... மேலும் பார்க்க

கல்லல் தனியாா் வங்கியில் பணம் மோசடி: வங்கி மேலாளா், துணை மேலாளா் கைது

காரைக்குடி அருகே கல்லல் தனியாா் வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகளை பயன்படுத்தி ரூ. 2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்ததாக வங்கியின் மேலாளா், துணை மேலாளா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க