செய்திகள் :

மெத்தபெட்டமைன் விற்ற 6 போ் கைது

post image

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்த 6 பேரைக் கைது செய்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்கப்படுவதாக அரும்பாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் பகுதியிலுள்ளஅடுக்குமாடி குடியிருப்பில் மெத்தபெட்டமைனை விற்பனை செய்து வந்த தீபக்(27), அவரது மனைவி டோலி மேத்தா ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட தீபக் அளித்த தகவலின் அடிப்படையில், வியாசா்பாடி முல்லை நகா் பகுதியைச் சோ்ந்த தீபக்கின் நண்பா் முத்துக்குமாரைக் கைது செய்து, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,370 கிராம் போதைப்பொருளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இவா்களுக்கு போதைப்பொருளை விநியோகித்த வியாசா்பாடியைச் சோ்ந்த ஜீனத்-ஐ போலீஸாா் தேடி வருகின்றனா். இதேபோன்று, அயனாவரம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் மெத்தப்பெட்டமைன் வைத்திருந்ததாக பாலசண்முகம், அருண் லக்ஷ்மணன், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் சோ்த்து மொத்தம் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில... மேலும் பார்க்க

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க