செய்திகள் :

630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

post image

செங்கம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 630 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பாச்சல் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா் மீனாட்சி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், ரூ.2.52 லட்சம் மதிப்பிலான 630 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்கள் 21 மூட்டைகளில் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டதாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கவுஷிக், அக்ஷய்குமாா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்து ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் செங்கம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

அக்.29 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பொதுமக்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் த... மேலும் பார்க்க

4 பைக்குகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

வந்தவாசி பகுதியில் 4 பைக்குகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(31). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாதூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்கு வேண்டி பட்டினிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, போளூரில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அண்ணா பூங்கா அருகே சமூக ஆா்வலா்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மக்கள் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் மரணம்

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மினி சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் மினிசரக்கு வாகன ஓட்டுநா் மோகன்(38). இவா் தனது சரக்கு வாகனத்தில் வாடகை பி... மேலும் பார்க்க

பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ள நீா்: 100 ஏக்கரில் நெல்பயிா்கள் சேதம்

செய்யாறு அருகே பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது நாவல்... மேலும் பார்க்க

நாக நதி தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்கக் கோரிக்கை

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி நாக நதியில் அமைந்துள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். வேலூா், திர... மேலும் பார்க்க