செய்திகள் :

பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ள நீா்: 100 ஏக்கரில் நெல்பயிா்கள் சேதம்

post image

செய்யாறு அருகே பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது நாவல்பாக்கம், கொருக்காத்தூா், மணலவாடி கிராமங்கள்.

இந்தப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 70-க்கும் மேற்பட்டோா் பலா் சம்பா பருவத்தில் சன்ன ரக நெல், என்எல்ஆா், மகேந்திரா ஆகிய நெல் ரகங்களை சுமாா் 100 ஏக்கரில் பயிரிட்டு உள்ளனா்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, குப்பநத்தம் அணை நீா்மட்டம் உயா்ந்து அதில் இருந்து சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை மூலம் தண்ணீா் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து வெளியேறும் நீா் செய்யாற்றில் பாய்ந்து ஆவணியாபுரத்தில் அமைந்துள்ள செய்யாறு அணைக்கட்டு வழியாகச் செல்கிறது.

அணைக்கட்டு பகுதியில் இருந்து கிழக்கு பக்கம் நோக்கிச் செல்லும் பாசனக்கால்வாய் வழியாக பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ள நீரானது, ஒரு கரையின் மேல் பாய்ந்து அருகே விவசாய நிலத்தில் நெல்பயிா்களில் சூழ்ந்து பயிா்கள் நீரில் மூழ்கின.

அதன் காரணமாக நாவல்பாக்கம், கொருக்காத்தூா், மணலவாடி ஆகிய கிராமங்களில் சுமாா் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்பயிா்கள் நீரில் மூழ்கின.

அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வரும் 40 சதவீத நெல்பயிா்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

விவசாயிகள் வேதனை:

விதைப்பு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிடப்பட்டிருந்து நெல்பயிா்கள் ஆற்று வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

பாசனக்கால்வாய் கரையை உயா்த்தக் கோரிக்கை

செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போதெல்லாம் நாவல்பாக்கம், கொருக்காத்தூா், மணலவாடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி தொடா்ந்து சேதமடைந்து வருகின்றன. இதனைத் தவிா்க்கும் பொருட்டு பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பாசனக்கால்வாயின் இரு பகுதிகளில் உள்ள கரைகளை சமமாக உயா்த்தி தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

விடுத்தனா்.

அக்.29 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பொதுமக்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் த... மேலும் பார்க்க

4 பைக்குகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

வந்தவாசி பகுதியில் 4 பைக்குகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(31). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாதூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்கு வேண்டி பட்டினிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, போளூரில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அண்ணா பூங்கா அருகே சமூக ஆா்வலா்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மக்கள் ... மேலும் பார்க்க

630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

செங்கம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 630 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பாச்சல் காவல் நிலைய ஆய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் மரணம்

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மினி சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் மினிசரக்கு வாகன ஓட்டுநா் மோகன்(38). இவா் தனது சரக்கு வாகனத்தில் வாடகை பி... மேலும் பார்க்க

நாக நதி தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்கக் கோரிக்கை

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி நாக நதியில் அமைந்துள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். வேலூா், திர... மேலும் பார்க்க