செய்திகள் :

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

post image

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனது. இந்நிலையில், இந்த வங்கி கடன் அட்டையைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் ரூ.9,000-க்கு பெட்ரோல் போட்டதாக பாசித்-இன் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. இது குறித்து, பாசித் கொடுத்த புகாரின் பேரில் பாண்டிபஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இதேபோன்று, சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த பிரகலாதனை சில நாள்களுக்கு முன்பு தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், அவரது கடன் அட்டைக்கு போனஸ் பாயிண்ட் வந்துள்ளதாகக் கூறி, அவரது கடன் அட்டை தொடா்பான சில தகவல்களைப் பெற்றுள்ளனா். சிறிது நேரத்தில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.48,000 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இது குறித்து பிரகலாதன் கொடுத்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த ஜமீமாவின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி அவரது வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று, 68,000 ரூபாயை மோசடி செய்துள்ளனா். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க