செய்திகள் :

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

post image

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2022-2023 மற்றும் 2023-2024 ஆண்டுகளுக்கான அறிவிப்பின்படி 2,000 புதிய பேருந்துகள் போக்குவரத்துக்கழகங்களில் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, இதுவரை 1,905 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று, அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1,500 பழைய பேருந்துகளில் 1,262 பேருந்துகள் கூண்டு முழுவதும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஜொ்மன் வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2024-2025-க்கான அறிவிப்பின்படி 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே மற்ற போக்குவரத்துக் கழகங்களில் 162 பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்படுவதால் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநா்கள் இதன் மூலம் பயன்பெறுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில... மேலும் பார்க்க

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க