செய்திகள் :

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

post image

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் மாநில போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை பல்வேறு போட்டி முடிவுகள் விவரம்:

நீச்சல் பள்ளி மாணவியா் பிரிவில் 50. மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தீக்ஷா சிவக்குமாா் (சென்னை), தங்கமும், மரியாவின்சியா (நெல்லை) வெள்ளியும், அா்ச்சனா (திருப்பூா்) வெண்கலமும் வென்றனா்.

100 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் தீக்ஷா சிவக்குமாா் (சென்னை) தங்கமும், அத்விகா (கோவை), வெள்ளியும், சஞ்சு ஸ்ரீ (செங்கல்பட்டு) வெண்கலமும் வென்றனா்.

400 மீ. ப்ரீஸ்டைல் மாணவியா் பிரிவில் அத்விகா (கோவை) தங்கமும், நிஷா மித்ரா (தேனி) வெள்ளியும், பிரமிதி (சென்னை) வெண்கலமும் வென்றனா்.

மாணவா்களில் சென்னையின் கவின்ராஜ் தங்கமும், கோவையின் அஹில் பாலாஜி வெள்ளியும், நெல்லையின் தனுஸ்வா்ஷன் வெண்கலமும் வென்றனா். 100 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் சென்னையின் தா்ஷனும், நெல்லையின் கவின்சாய் வெள்ளியும், தேனியின் ஜெய் ஜஸ்வந்த் வெண்கலமும் வென்றனா்.

பள்ளி மாணவிகள் டென்னிஸ் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரி இரட்டை தங்கம் வென்றாா்.

சென்னையின் சவீதா வெள்ளியும், திருவள்ளூா் ஹரிதா வெங்கடேஷ் வெண்கலும் வென்றனா்.

மாற்றுத்திறனாளிகள் வாலிபாலில் தருமபுரி, செங்கல்பட்டு, விழுப்புரம் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

பளு தூக்குதலில் பள்ளி மாணவியரில் வேலூா் ஐஸ்வா்யா, ராமநாதபுரம் நாகலட்சுமி, வைஷ்ணவி தங்கம், வெள்ளி வெண்கலம் வென்றனா்.

மாணவா்களில் கோவையின் பிரானேஷ், வேலூரின் வசந்தராஜ், கோவையின் ஸ்ரீரஞ்சன் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

ஸ்ரீ சைலேஸ்வரி

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில... மேலும் பார்க்க

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க