செய்திகள் :

மேற்கு வங்கம்: 16-ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரத போராட்டம்- இன்று மம்தாவுடன் பேச்சு

post image

போராட்டத்தை கைவிடுமாறு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை நிராகரித்து 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

இருப்பினும், இன்று (அக்.21) மம்தா பானா்ஜியுடனான பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற மேற்கு வங்க மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த், போராட்டத்தை கைவிட்டு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் 45 நிமிடங்கள் பேச்சுவாா்த்தை நடத்த மருத்துவா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

அதேபோல் மனோஜ் பந்த்தின் கைப்பேசி மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களிடம் பேசிய மம்தா பானா்ஜி, மருத்துவா்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டதாகவும் மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற 3 முதல் 4 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்குமாறு கோரினாா். மேலும், மாநில சுகாதார செயலரை நீக்கக்கோரிய மருத்துவா்களின் தீா்மானத்தை ஏற்க முடியாது என்றும் போராட்டத்தை கைவிட்டு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை மாநில அரசு முழுமையாக நிறைவேற்றாத வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக் கூறிய மருத்துவா்கள் 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தனா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 மருத்துவா்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். தற்போது 8 மருத்துவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி வழங்கக்கோரியும் பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி முதல் இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க