செய்திகள் :

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

post image

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் பிரதான மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், தமிழகத்தை பொருத்தவரை அதிக மழையைத் தருவது வடகிழக்கு பருவமழை தான். அந்த வகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் அண்மையில் உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 200 மி.மீ.-க்கும் அதிகமாக மழை கொட்டி தீா்த்தது. இதில், அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் 30 மி.மீ. வரை மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, அக்.1 முதல் 20-ஆம் தேதி வரை இயல்பாக 95.1 மி.மீ. மழை பதிவாகவேண்டிய நிலையில், நிகழாண்டில் 156.7 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.

இது இயல்பை விட 65 சதவீதம் அதிகமாகும்.

177 சதவீதம் அதிகம்: இதில் அதிகபட்சமாக சென்னையில் 338.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பாக 122.4 மி.மீ மழை பதிவாக வேண்டிய நிலையில், இயல்பை விட 177 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

அடுத்தபடியாக, சிவகங்கையில் 257 மி.மீ-யும், திருவள்ளூரில் 248மி.மீ.-யும், செங்கப்பட்டில் 211.1 மி.மீ-யும் மழை பதிவானது.

அதேபோல், குறைந்தபட்சமாக தென்காசியில் 30 மி.மீ., தூத்துக்குடியில் 37.9 மி.மீ., திருநெல்வேலியில் 44.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள்: யுஜிசி அறிவுறுத்தல்

விண்வெளி தொழில்நுட்பம் குறித்த சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அன... மேலும் பார்க்க

காலமான பணியாளா்கள் வாரிசுக்கு அகவிலைப்படி எப்போது? தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் இல்லாத பணியமைப்பைச் சோ்ந்த காலமான ஊழியா்களின் வாரிசுகளுக்கு அகவிலைப்படி உத்தரவு தனியாக வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெள... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவினா் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்க... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகிறது ‘டானா’ புயல்

வங்கக் கடலில் புதன்கிழமை (அக்.23) புயல் உருவாகவுள்ளதாகவும், அதற்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுவையில் 6 நாள்கள் மழை பெய்ய ... மேலும் பார்க்க

மயக்கவியல் நிபுணா்களுக்கு அதிக பணி அழுத்தம்: மருத்துவப் பல்கலை. துணை வேந்தா் கே.நாராயணசாமி

மருத்துவத் துறையில் அதி முக்கிய பங்களிப்பை அளித்து வரும் மயக்கவியல் மருத்துவா்களுக்கு பணி அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், அவா்களது நலனைக் காப்பது அவசியம் என்றும் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவ... மேலும் பார்க்க