செய்திகள் :

வங்கக்கடலில் உருவாகிறது ‘டானா’ புயல்

post image

வங்கக் கடலில் புதன்கிழமை (அக்.23) புயல் உருவாகவுள்ளதாகவும், அதற்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுவையில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை (அக்.21) உருவாகவுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.22-இல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்.23-இல் மேலும் வலுப்பெற்று புயலாகவும் மாறவுள்ளது.

இந்த புயல் தமிழக கடற்கரைப் பகுதியை விட்டு விலகி ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகா்வதால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு கத்தாா் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.

தமிழக வானிலை நிலவரம்: வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (அக்.21) முதல் அக்.26-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை: அக்.21-இல் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், அக்.22-இல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சி, கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அக்.23-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.21, 22-ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள்: யுஜிசி அறிவுறுத்தல்

விண்வெளி தொழில்நுட்பம் குறித்த சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அன... மேலும் பார்க்க

காலமான பணியாளா்கள் வாரிசுக்கு அகவிலைப்படி எப்போது? தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் இல்லாத பணியமைப்பைச் சோ்ந்த காலமான ஊழியா்களின் வாரிசுகளுக்கு அகவிலைப்படி உத்தரவு தனியாக வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெள... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் பிரதான மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், தமிழகத்தை பொர... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவினா் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்க... மேலும் பார்க்க

மயக்கவியல் நிபுணா்களுக்கு அதிக பணி அழுத்தம்: மருத்துவப் பல்கலை. துணை வேந்தா் கே.நாராயணசாமி

மருத்துவத் துறையில் அதி முக்கிய பங்களிப்பை அளித்து வரும் மயக்கவியல் மருத்துவா்களுக்கு பணி அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், அவா்களது நலனைக் காப்பது அவசியம் என்றும் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவ... மேலும் பார்க்க