செய்திகள் :

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!

post image

தீபாவளி பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்ள நிலையில், நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு இந்த வார இறுதி முதல் மக்கள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக ரயில்களிலும், ஒரு மாதத்துக்கு முன்னதாக அரசு இயக்கும் ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் நிறைவடைந்துவிட்டன. ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் சிறப்பு ரயில்களிலும் உடனடியாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : தீபாவளியையொட்டி 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில், தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11,176 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், இதனை ஒருங்கிணைக்கவும் பயணிகளுக்கு உதவுவதற்காகவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151, 04424749002, 04426280445, 04426281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண... மேலும் பார்க்க

நாவரசு கொலை: ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்ய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் அதிகம் சிக்கிய அதிகாரிகள்.. எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கயி அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ... மேலும் பார்க்க

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்ட... மேலும் பார்க்க

அதிமுகவில் நடிகை கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கெளதமியை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.பாஜகவில் இருந்த நடிகை கெளதமி, கடந்த பிப்ரவரி மாதம் எடப்பா... மேலும் பார்க்க