செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

post image

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது. அதே நிலை பேரவைத் தோ்தலிலும் நீடித்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என எதிா்க்கட்சிகள் கணித்துள்ளன.

பாஜகவுடன் உத்தவ் தாக்கரே(சிவசேனை) பேச்சுவார்த்தை?

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி(எம்விஏ) கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மகாராஷ்டிரம் சென்றிருந்தபோது, மகாராஷ்டிர துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸை சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதனை சிவசேனை(உத்தவ் அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “எம்விஏ கூட்டணியில் ஓரிரு இடங்களில் மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடிக்கிறது. இந்நேரத்தில், தேசத்தின் நலன் கருதி சில தியாகங்களைச் செய்தாக வேண்டும்.

கடந்த மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்காக, எங்கள் கட்சிக்கு செல்வாக்குமிக்க அமராவதி, கோல்ஹாபூர் மற்றும் ராம்டேக் ஆகிய 3 இடங்களையும் பெரிய மனதுடன் விட்டுக்கொடுத்தோம். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது விதர்பா தொகுதியை சிவசேனைக்கு அளிக்கலாம்.

நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும், தங்கள் கட்சித் தொண்டர் தேர்தலில் களமிறக்கப்பட வேண்டுமென்றே விரும்பும். ஆனால், கூட்டணியில், அதிலும் குறிப்பாக தொகுதிப் பங்கீட்டில் ஒவ்வொருவரும் ஒரு சில தியாகங்களைச் செய்தாக வேண்டும்.

தியாகம் செய்வது என்பது விஷயமல்ல. மாறாக, தேச நலன், மகாராஷ்டிரத்தின் நலன் ஆகியவற்றைக் குறித்தான விஷயம் இது. நாங்கள்(சிவசேனை) மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது தாராள மனதுடன் செயல்பட்டுள்ளோம். ஏனெனில், அரசமைப்பின் எதிரிகளை நாம் தோற்கடிக்க வேண்டும். அந்த வகையில், இன்று, மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அதிகாரத்திலிருந்து நாம் அகற்ற வேண்டும்” என்றார்.

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. மேலும் பார்க்க