செய்திகள் :

``ஓவர் போதையில் இருந்ததால்..." - போலீசை மிரட்டிய வைரல் நபர்கள்; மன்னிப்புக் கேட்கும் வீடியோ

post image
சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.

நேற்று நள்ளிரவில் மெரினா சாலையில் இருந்த காரை எடுக்கக்கோரி காவல்துறையினர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் காரின் உள்ளே இருந்த ஆணும் பெண்ணும் முழு போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து போலீசாரை மிக இழிவாகப் பேசியதுடன், அந்த இருவரும் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்... போலீஸ் விசாரணை!

நேற்று போலீசாரை மிரட்டும் விதமாகவும் கேலியாகவும் பேசிய இருவரையும் இன்று கைது செய்தனர். இந்த நிலையில் அந்த நபர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ ஒன்றை சென்னை மாநகர காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், "என் பெயர் சந்திரமோகன் நான் வேளச்சேரியில் இருந்து வருகிறேன். நேற்று 12 மணியளவில் நானும் என்னுடைய தோழியும் மெரினா அருகில் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த காவலர்கள் அங்கிருந்த அனைவரையுயம் எழுப்பிக்கொண்டிருந்தனர். அதனால் எனக்கு கோபம் வந்தது.

என் பக்கத்தில் வந்தபோது நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். கெட்ட வார்த்தையெல்லாம் பேசிவிட்டேன். ஓவர் போதையில் இருந்ததால் நிதானமாக இல்லை. காவல்துறையினர் எனத் தெரிந்ததும் அவர்களை எதோ திட்டிவிட்டு அவர்களிடம் சொல்லாமலே காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

இனி காவல்துறையினரை இதுபோல பேச மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" எனப் பேசியிருக்கிறார் அந்த நபர்.

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க

`ஜாமீன் கிடையாது' - பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத... மேலும் பார்க்க

`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்... போலீஸ் விசாரணை!

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணி, வாகனச் சோதனையில் ஈடுபடுவது உண்டு. சம்பவத்தன்று போலீஸார், மெரினா சர்வீஸ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சாலையில் ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்... விசாரணையில் அம்பலம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; கிராம மக்களிடம் சிக்கிய மின் வாரிய ஊழியர் கைது!

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர். அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் அந்த பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு... மேலும் பார்க்க

ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 17 வயது சிறுவன் கைது! - நடந்தது என்ன?

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டுவரும் நிலையில், இந்த வ... மேலும் பார்க்க