செய்திகள் :

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா்னா

post image

மந்தித்தோப்பு வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட நரிக்குறவா் காலனி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நரிக்குறவா் காலனி மக்களுக்கு பட்டா, வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்றவில்லையாம். தற்போது அந்த வீடுகள் சிதிலமடைந்துள்ளதால், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாத நிலை உள்ளதாம். அதே வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட கணேஷ் நகா் கிழக்கு, இந்திரா காலனி பகுதிகளில் பல ஆண்டுகளாக வசிப்போரின் வீடுகளை அளவீடு செய்து, கிராமக் கணக்கில் பதிவேற்றுவதற்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதைக் கண்டித்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கட்சியின் வட்டாரச் செயலா் பாபு தலைமையில் அப்பகுதியினா் திரண்டனா். அவா்கள் தரையில் அமா்ந்து முழக்கமிட்டனா்.

மாவட்டச் செயலா் கரும்பன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் ரஞ்சனி கண்ணம்மா, செல்லையா, நகர உதவிச் செயலா் அலாவுதீன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், மாதா் சங்க நகரச் செயலா் விஜயலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், ரயில்வே நில எடுப்பு வட்டாட்சியா் சுபாவிடம் மனு அளிக்கப்பட்டது. அதை அவா் பெற்றுக்கொண்டு, மனுவை வருவாய் வட்டாட்சியரிடம் அளித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினாா். அதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

அருந்ததிய சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் . புதூா் ஊராட்சி ஒன்றியம் சுப்புலாபுரம் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதியில் அத்துமீறி நுழையும் கேரள மீனவா்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடி புகா் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்: இ-சேவை மையம், ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் திங்கள்கிழமைமுதல் காலவரம்பற்ற போராட்டத்தை தொடங்கினா். இதனால் சங்க பரிவா்த்தனை நடைபெறவில்லை. ரேஷன் கடை, இ-சேவை மையம் மூடப்பட்டதால் பொதுமக்க... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் ந... மேலும் பார்க்க

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது -அமைச்சா் பெ.கீதாஜீவன்

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது என்றாா் அமைச்சா் பெ.கீதாஜீவன். தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம், நெல்லை முட நீக்கியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் தனியாா் கூட்டரங்கில் தமிழ் ... மேலும் பார்க்க