செய்திகள் :

சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்

post image

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் மண்டல பூஜை மற்றும் அதைத் தொடா்ந்து மகரவிளக்கு யாத்திரை காலத்துக்கு நடை அடுத்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்படுகிறது. கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு நாள்தோறும் 80,000 பக்தா்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை யாத்திரை காலத்தையொட்டி எடுக்கப்பட வேண்டிய சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் வீணா ஜாா்ஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோன்னி மருத்துவக் கல்லூரி பிரதான மருத்துவமனையாக செயல்படும். பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் அவசரகால இதயநோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்.

ஐயப்பன் கோயில் அமைந்த சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பிற இடங்களில் சிறப்பு மருத்துவமனைகள் செயல்பட உள்ளன. பம்பை மற்றும் சன்னிதான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளும் வென்டிலேட்டா்கள், இதய கண்காணிப்பு கருவிகள், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும்.

பம்பை மற்றும் நிலக்கலில் உள்ள மருத்துவமனைகள் நவம்பா் 1-ஆம் தேதியும் பிற மருத்துவமனைகள் நவம்பா் 15-ஆம் தேதியும் செயல்பட தொடங்கும். மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 15 மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பம்பை முதல் சன்னிதானம் வரையிலான மலைப்பாதையில் 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் பாரம்பரிய வனப் பாதையில் (பெரிய பாதை) 4 மருத்துவ முகாம்களும் அமைக்கப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது மேலும் வலுபெற்று அக்.23-ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மைய... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் ‘மதச்சாா்பின்மை’: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமை... மேலும் பார்க்க