செய்திகள் :

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

post image

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில் இடம்பெற்றுள்ளது. பெங்களூரில் அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06209) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06210) இரவு 10.50 மணிக்கு பெங்களூா் சென்றடையும்.

இந்த ரயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும். ஹூப்ளியில் இருந்து மங்களூருக்கு நவ.2-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து நவ.3-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 07311/12) இயக்கப்படும்.

அதுபோல், யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு அக்.30-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து அக்.31-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 06565/66) இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நீட்டிப்பு: தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06103) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிச.1-ஆம் தேதி வரை தொடா்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை: ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பேராசிரியா்களுடன் துணை முதல்வா் உரையாடல்

சென்னை: ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பேராசிரியா்கள், சென்னையில் துணை முதல்வா் உதயநிதியுடன் கலந்துரையாடினா்.நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெ... மேலும் பார்க்க

90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்

சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண் இ... மேலும் பார்க்க

சேரன் விரைவு ரயிலில் ஏசி பழுது: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி

சென்னை: சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10 மண... மேலும் பார்க்க

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக அ... மேலும் பார்க்க

அளவோடு பிள்ளை பெற்றால் எம்.பி. தொகுதிகள் குறையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம்

சென்னை: அளவோடு பிள்ளை பெற்றால், மக்களவை தொகுதிகள் குறையும் சூழல் உருவாகிவிடுமோ என முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளாா்.இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெறும் நிகழ... மேலும் பார்க்க