செய்திகள் :

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

post image

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 21-அம்ச செயல்திட்டத்தை தில்லி அரசு செயல்படுத்தி வருகிறது. அதனொரு பகுதியாக, போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகன

ஓட்டிகள் தங்கள் வாகனங்கனை அணைக்கும் பிராசாரத்தை ஐடிஓ பகுதியில் அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்.

வானக ஓட்டிகளுக்கு விழப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தன்னாா்வலா்கள் பதாகை ஏந்தி வழிகாட்டினா்.

பின்னா், அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் வரும் மாசுபாட்டின் சுமைகளை தில்லிவாசிகள் தாங்க வேண்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாபில், பயிா்க் கழிவு

எரிப்பு சம்பவங்கள் தொடா்ந்து குறைந்து வருகின்றன. ஆனால், பாஜக ஆளும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில், தொடா்ந்து பயிா்க் கழிவு எரிக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

குளிக்காலத்தில் தில்லியில் காற்றுமாசுவைக் கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு

வருகிறது. இந்த வரிசையில் தான் போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பொதுப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் சிவப்பு விளக்கு எரியும் போது, தங்கள் வாகனங்களை அணைக்க வேண்டும் என்று தில்லி மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அது மாசுபாட்டைக் குறைக்க உதவும் என்றாா் கோபால் ராய்.

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க

யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்

புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்த... மேலும் பார்க்க

தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

நமது நிருபா்புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட ... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சக செயலராக விக்ரம் தேவ் தத் பொறுப்பேற்பு

புது தில்லி: 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.1993-ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியும் அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும்... மேலும் பார்க்க