செய்திகள் :

தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

post image

நமது நிருபா்

புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்தில்உள்ள விசாகா ஸ்ரீசாரதா பீடம் நடத்த உள்ளது. இதுகுறித்து விசாகா ஸ்ரீ சாரதா பீடத்தின் இளைய மடாதிபதியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வாத்மானந்த்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியரின் போதனைகளைப் பின்பற்றி ஆந்திரத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வரூபானந்த்தேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் வழிகாட்டுதலின்கீழ் விசாகா ஸ்ரீசாரதா பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பீடம் மூலம் தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் உள்ள சனாதன தா்ம, கலாசார விஷயங்களை எடுத்துரைக்கும் வகையிலும், சனாதன தா்மத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையிலும் தேசத்தின் நலனுக்காகவும், அமைதி, பாதுகாப்புக்காகவும் ஆன்மிகத் தலைநகராக உள்ள வாரணாசியில் வரும் நவ.3-ஆம் தேதி முதல் நவ.5-ஆம் தேதி வரை ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் நிகழ்ச்சிக்கு விசாகா சாரதா பீடம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதில், தென் மாநிலங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோா் கலந்துகொள்ள உள்ளனா். புனிதமான காா்த்திகை மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.3-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கங்கை ஸ்நானத்துடன் யாகம் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து, மகா ருத்ர சஹிதா சத சண்டி யாகம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது. நவ.4-இல் ராமேசுவரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் இருந்து உருவாக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, சிவபாா்வதி கல்யாணம் நடைபெறுகிறது.

நவ.5-ஆம் தேதி மகா சுவாமிகள் மூலம் ஜகத்குரு ஆதி சங்கர பகவத்பாத பூஜை, சா்ப ஸ்வரூபா மானஸா தேவி யந்த்ர ஆராதனை, சீதா ராம கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க

யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்

புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்த... மேலும் பார்க்க

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்ச... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட ... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சக செயலராக விக்ரம் தேவ் தத் பொறுப்பேற்பு

புது தில்லி: 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.1993-ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியும் அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும்... மேலும் பார்க்க