செய்திகள் :

Salman Khan: "சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தவறு" - மன்னிப்பு கேட்டு மீண்டும் மெசேஜ்

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சல்மான் கானை கொலை செய்யவும் முயற்சி செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ் ஆப் மெசேஜ் ஒன்று, மும்பை போக்குவரத்து காவல்துறையினருக்கு வந்தது. அதில் லாரன்ஸ் பிஷ்னோயுடனான பகையைத் தீர்த்துக்கொள்ள ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்றும், அப்படிக் கொடுக்கவில்லையெனில் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதை விட மோசமான நிலை சல்மான் கானுக்கு ஏற்படும் என்று அதில் மிரட்டியிருந்தனர்.

மேலும், "சல்மான் கான் உயிரோடு இருக்கவேண்டுமானால் ரூ.5 கோடியைக் கொடுக்கவேண்டும். இந்த மெசேஜை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்." என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே தொடர் அச்சுறுத்தல் காரணமாக சல்மான் கானின் மும்பை மற்றும் மும்பை புறநகரில் இருக்கும் வீடுகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போட்டுள்ளனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. இக்கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே மிரட்டல் மெசேஜ் வந்த அதே போன் நம்பரிலிருந்து மீண்டும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் கொலை மிரட்டல் விடுத்துத் தவறு செய்துவிட்டேன் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டு மெசேஜ்களும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபரைக் கைது செய்ய மும்பையிலிருந்து தனிப்படை காவல்துறையினர் ஜார்க்கண்ட் விரைந்துள்ளனர்.

முன்னதாக சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் மும்பையில் சுட்டுக்கொலை செய்தனர். இக்கொலையில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஒருவர் தப்பித்து ஓடிவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

``100 கிலோவை தாண்டிய எடை.. மனஅழுத்தம் அதிகமானது'' - பிரசவ கால அனுபவம் பகிர்ந்த சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உள்பட ஏராளமான மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தொழிலதிபர் அக்‌ஷய் வார்தே என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு சொந்த வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை... மேலும் பார்க்க

ரூ.250 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 மாடி பங்களா; விரைவில் குடியேறும் ரன்பீர் கபூர்-ஆலிபா பட் தம்பதி!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி மும்பை பாந்த்ராவில் ரூ.250 கோடியில் 6 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி பங்களா கட்டி வந்தனர். இக்கட்டடத்தின் கட்டுமானப் பணியை கபூர் தம்பதி அடிக்கடி சென்று பார்த்து வ... மேலும் பார்க்க

SRK: "இறுதி மூச்சு வரை நடிப்பேன்; யாராவது ஆக்‌ஷன் சொல்ல நான் சாக வேண்டும்..." - ஷாருக்கான் விருப்பம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகி... மேலும் பார்க்க

Salman Khan: "ரூ. 5 கோடி கொடுக்காவிட்டால்...." - சல்மான் கானுக்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இக்கொலை மிரட்டல் காரணமாக சல்மான் கான் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடனேயே வெளியில் வருகிறார். ... மேலும் பார்க்க

Tamannaah: பணமோசடி வழக்கு; 2 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நடிகை தமன்னா - என்ன நடந்தது?

'HPZ டோக்கன்' எனும் மொபைல் செயலி பிட்காயின், மற்றும் கிரிப்டோகரன்ஸி முதலீடுகள் என்ற போலி விளம்பரம் மூலம் பலரை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வர... மேலும் பார்க்க

Amitabh Bachchan: அமிதாப் பச்சன் வாங்கிய புதிய BMW i7 கார் - விலை எவ்வளவு... சிறப்பம்சம் என்ன?

சமீபத்தில் தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அமிதாப் பச்சன், தனது கராஜில் புதிய கார் ஒன்றை இணைத்துள்ளார்.அது BMW i7 சொகுசு செடான் (3 பெட்டிகள் உள்ள) கார். இது ஒரு எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்ப... மேலும் பார்க்க