செய்திகள் :

Stalin: "சென்னை வருகிறேன் என்றார்; வந்தார். ஆனால்..." - முரசொலி செல்வம் குறித்து ஸ்டாலின் உருக்கம்

post image
கடந்த 10 ஆம் தேதி முரசொலி நாளிதழ் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் காலமானார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நேற்று (21.10.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், "முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இறப்பதற்கு முன்பு என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். 'நான் சென்னை வருகிறேன்' என்றார். வந்தார். ஆனால் உடல் மட்டும்தான் வந்தது.

கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை அடுத்து, முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்குப் பிறகு, என் மனம் உடைந்து சுக்கு நூறாகிவிட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். காரணம், பள்ளிக்காலம் முதல், எனக்கு இயக்கப் பணிகளைக் கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம். மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படிப் பேச வேண்டும் என எனக்கு நிறைய பயிற்சி கொடுத்திருக்கிறார்.

இன்று அவர் இல்லை என நினைக்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். தி.மு.க., முப்பெரும் விழாவின்போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும்.

ஸ்டாலின், முரசொலி செல்வம்

திராவிட இயக்க கருத்தியலை எல்லோருக்கும் ஆழமாகக் கொண்டு சேர்க்கும் வகையில் முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் 'திராவிட இதழியல் பயிற்சி அமைப்பு' ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்." என்று மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`ராஜ கண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு’ - அறப்போர் இயக்கம்

'அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலம் கிட்டதட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக' அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

காமராஜர் குறித்து `சர்ச்சை கருத்து' தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி; கொதித்த காங்கிரஸ், தமிழிசை

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத... மேலும் பார்க்க

Elon Musk: "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது; ஏனென்றால்.." - எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நீங்கள் 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க்.உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த... மேலும் பார்க்க

கேரளா: பத்மநாப சுவாமி கோவிலில் பூஜை உருளி திருட்டு; ஆஸ்திரேலிய மருத்துவர் மீது வழக்கு; நடந்தது என்ன?

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமிகோயில் ஆகும். திருவிதாங்கூர் மன்னர்ஆட்சிக்காலத்தில் அவர்களது குலதெய்வமாக வழிபட்டு வந்த ஸ்ரீபத்மநாபசுவாமிகோயிலில், மூலவர் சு... மேலும் பார்க்க

ADMK: "விருதுநகருக்கு மூன்று அமைச்சர்கள் லட்சியம்; ஒரு அமைச்சர் நிச்சயம்!" - ஆர்.பி.உதயகுமார் உறுதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதய... மேலும் பார்க்க

குடியாத்தம்: கிழித்து நீக்கப்பட்ட தவெக போஸ்டர்கள் - ஆளும் தரப்பு மீது கடுகடுக்கும் நிர்வாகிகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) `முதல் மாநாடு’ வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது.தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் அத்தியாயத்துக்கான முதல் ... மேலும் பார்க்க