செய்திகள் :

``கூவத்தூரில் நடந்த கூத்து மக்களுக்குத் தெரியும்!'' - எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

post image
எவ்வளவோ சீனியர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். தற்போது இதற்கு உதயநிதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் , "தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எனக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முழு சுதந்திரமும் அவருக்கு உண்டு. ஏற்கெனவே நான் பொறுப்பேற்கும் பொழுது வந்த விமர்சனத்தை வரவேற்கிறேன் என தெரிவித்திருந்தேன். எடப்பாடி பழனிசாமி என்னை விட அரசியலில் அனுபவம் உடையவர்தான், நான் அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நான் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவினருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தபோது, யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி வந்தபோது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட அதிக சீனியர்கள் இருந்தனர். குறிப்பாக அமைச்சராக இருந்த செங்கோட்டையன்தான் அடுத்த முதலமைச்சராக வருவார் என கூறினார்கள்.

அதேபோல், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தபோது அவர்களை மீறி எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார்? கூவத்தூரில் நடந்த கூத்து என்ன? என்பதெல்லாம் தொலைக்காட்சியில் மக்களுக்கு தெரியும். எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை விமர்சனம் செய்யும் முன்பு எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை நினைத்துப் பார்த்துவிட்டு மற்றவரை விமர்சனம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் எனக்கு கொடுத்துள்ளது பதவி கிடையாது கூடுதல் பொறுப்பு. ஆனால், அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை நான்கு ஆண்டுகள் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பதவியை பங்கு போட்டுக் கொண்டனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டியது சரியா.. பாதிப்பு வருமா?

Doctor Vikatan: சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய வீடியோ விட்டது சர்ச்சைக்குள்ளானது. குழந்தை பிறந்ததும் வெட்டி எரிகிற தொப்புள்கொடியை இப்படி... மேலும் பார்க்க

விருதுநகர்: பள்ளிக்காகத் தனியாளாகப் போராடிய மாற்றுத்திறனாளி; மக்கள் திரண்டு ஆதரவு தந்த சுவாரஸ்யம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமப் பகுதியில் வசித்து வருபவர் பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளி முகேஷ். இவர் அப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சமூக ஆர்வலராகவு... மேலும் பார்க்க

``எல்.முருகனின் விஷமத்தை விட... சீமானின் கருத்து ஆபத்தானது'' - விசிக பொதுச் செயலாளர் அறிக்கை!

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை.."விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல... மேலும் பார்க்க

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்...உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்!

அமெரிக்கா தேர்தல் களம்அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்... மேலும் பார்க்க

``ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்'' - ஆளுநருக்கு ஆதரவாக பிரேமலதா பதிலடி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் சான்றோர்குப்பம் பகுதியில், தேமுதிக நிர்வாகி மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பிரேமலதா வந்திருந்தார். அடுத்து ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க