செய்திகள் :

இந்தியா - சீனா மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்படுமா?

post image

கிழக்கு லடாக்கில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா முன்வந்துள்ளது.

சமீப காலங்களில், இந்தியா - சீனா இடையே நடைபெற்று வந்த மோதல்கள் தொடர்பாக இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் இணக்கமான சூழல் காணப்படுவதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

தற்போது இரு நாடுகளும் இந்த விவகாரங்களில் ஒரு தீர்வை எட்டியுள்ளதாகவும், வரும் காலங்களில் இந்தத் தீர்மானங்களை செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த விஷயத்தில் அவர் மேற்கொண்டு தகவல்கள் தர மறுத்துவிட்டார்.

இதையும் படிக்க | ரஷியா சென்றடைந்தார் மோடி!

ரஷியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்க்கும் கலந்து கொள்கின்றனர். அங்கு நடக்கும் இருதரப்பு சந்திப்பில் பேச்சுவார்த்தை நடக்கும்போது, மேலும் விவரங்களை உங்களுக்கு அறிவிக்கிறோம் என சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது.

இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியா நேற்று (அக். 22) அறிவித்தது. இது, இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே 4 ஆண்டுகளாக நடைபெறும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

பிரியங்காவின் பேரணியில் கட்சிக் கொடிகளுக்கு அனுமதி!

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்த... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரிணமூல் எம்பிக்கு காயம்

புது தில்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்... மேலும் பார்க்க

பிரியங்காவை விடச் சிறந்த பிரதிநிதியைக் கற்பனை செய்ய முடியாது: ராகுல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் "தனது சகோதரியை விட சிறந்த பிரநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது" என்று ராகுலி காந்தி தெ... மேலும் பார்க்க

எப்போது கரையை கடக்கிறது டானா புயல்? தயாராகிறதா ஒடிசா?

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், அது அக்டோபர் 24ஆம் தேதி ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் ... மேலும் பார்க்க

ரஷியா சென்றடைந்தார் மோடி!

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.இரண்டு நாள் பயணமாக ரஷியாவின் கசானுக்கு இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

பெங்களூரு சாலைகளில் படகில்தான் செல்ல முடியும்..! மக்கள் ஆதங்கம்

பெங்களூரு சாலைகளில் கனமழையால் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(அக். 21) இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய... மேலும் பார்க்க