ஏடிஎம் கொள்ளை: வடமாநில கும்பலை பிடித்த காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு!
பிரியங்காவின் பேரணியில் கட்சிக் கொடிகளுக்கு அனுமதி!
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் வயநாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தி நடத்திய பேரணியின்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைப் பயன்படுத்தவில்லை. இதனால் கட்சி பயப்படுவதாக சிபிஐ(எம்) குற்றம் சாட்டியதாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில் தற்போது நிகழும் பேரணியில் கட்சிக் கொடிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2019 மலை மாவட்டத்தில் நிகழ்த்திய தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான ஐயுஎம்எல்-யின் பச்சைக் கொடிகள் அக்கட்சியின் கொடிகளின் எண்ணிக்கை விட அதிகமாக இருந்தன. மேலும் பேரணி இந்தியாலா அல்லது பாகிஸ்தானிலா என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.
நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்... மேலும் பார்க்க
நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன
நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலம், கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 மற்றும் ஒரு பார்சல் பெட்ட... மேலும் பார்க்க
டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க
சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியா முழுக்க இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே நேற்று முன... மேலும் பார்க்க
ஹைதராபாத்: நாயை துரத்தும்போது இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்
ஹைதராபாத்: நாயை துரத்தும்போது ஹோட்டலின் 3-வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலிஹைதராபாத்தில் ஹோட்டலில் நுழைந்த நாயை துரத்தும்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்... மேலும் பார்க்க
பாகிஸ்தான் ஆதரவு முழக்கம்! விநோத தண்டனை அளித்த நீதிமன்றம்!
பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியவரை ஜாமீனில் வெளிவிட்ட மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், நிபந்தனையாக விநோத தண்டனையை அளித்துள்ளது.மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஃபைசல் கான் என்பவர் கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆ... மேலும் பார்க்க