செய்திகள் :

சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

இந்தியா முழுக்க இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே நேற்று முன்தினம் (அக். 20) வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிஆா்பிஎஃப் பள்ளியின் சுவா், அதன் அருகில் உள்ள கடைகள், காா் ஆகியவை சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த வெடிவிபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, சிஆர்பிஎஃப், தேசிய பாதுகாப்புப் படை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க |தில்லியில் சிஆா்பிஎஃப் பள்ளி அருகே மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு; ஏஎன்ஐ - என்எஸ்ஜி சோதனை

இந்த நிலையில், இந்திய முழுவதும் இருக்கும் சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, தில்லியில் வெடிகுண்டு வெடித்த பள்ளி உள்பட 2 பள்ளிகளுக்கும், ஹைதராபாத்தில் ஒரு பள்ளிக்கும் தனித்தனியே இன்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தில்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் இருக்கும் சிஆர்பிஎஃப் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது.

வெடிகுண்டு தொடர்பான சோதனையில் அந்த அச்சுறுத்தல்கள் போலியானது என தெரிய வந்துள்ளது. ஆனால், அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டுள்ளது.

இதையும் படிக்க |போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

கடந்த சில நாள்களாக 100 -க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (அக். 21) ஒரு நாளில் மட்டும் 30 விமானங்களுக்கும், இன்று 10 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

மக்களின் பாதுகாப்பு ஒன்றே அரசிற்கு முக்கியம் என்றும் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களை விமானங்களில் பறப்பதற்கான தடை பட்டியலில் சேர்க்க விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று தெரிவித்தார்.

மனைவி திருநங்கை? மருத்துவப் பரிசோதனைக்காக நீதிமன்றம் நாடிய கணவர்!

தில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து பாலினத்தை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி திருநங்கை என குற்றம் சாட்டியு... மேலும் பார்க்க

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்தது: 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் செவ்... மேலும் பார்க்க

நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்... மேலும் பார்க்க

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலம், கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 மற்றும் ஒரு பார்சல் பெட்ட... மேலும் பார்க்க

டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க

ஹைதராபாத்: நாயை துரத்தும்போது இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்

ஹைதராபாத்: நாயை துரத்தும்போது ஹோட்டலின் 3-வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலிஹைதராபாத்தில் ஹோட்டலில் நுழைந்த நாயை துரத்தும்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்... மேலும் பார்க்க