செய்திகள் :

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன

post image

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 மற்றும் ஒரு பார்சல் பெட்டி என இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது பெரிய காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!

இருப்பினும், பயணிகள் தங்களது சொந்த இடத்துக்கு செல்ல அனைத்து முயற்சிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டதோடு பயணிகளுக்கு அடிப்படை வசதிகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மற்றொரு புறம் சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக அக்டோபர் 9 ஆம் தேதி, கல்யாண் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி திருநங்கை? மருத்துவப் பரிசோதனைக்காக நீதிமன்றம் நாடிய கணவர்!

தில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து பாலினத்தை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி திருநங்கை என குற்றம் சாட்டியு... மேலும் பார்க்க

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்தது: 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் செவ்... மேலும் பார்க்க

நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்... மேலும் பார்க்க

டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க

சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுக்க இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே நேற்று முன... மேலும் பார்க்க

ஹைதராபாத்: நாயை துரத்தும்போது இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்

ஹைதராபாத்: நாயை துரத்தும்போது ஹோட்டலின் 3-வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலிஹைதராபாத்தில் ஹோட்டலில் நுழைந்த நாயை துரத்தும்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்... மேலும் பார்க்க