செய்திகள் :

பெங்களூரு சாலைகளில் படகில்தான் செல்ல முடியும்..! மக்கள் ஆதங்கம்

post image

பெங்களூரு சாலைகளில் கனமழையால் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(அக். 21) இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த மழையால், நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும், இரவு பெய்த கனமழையால் பெங்களூரில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்க வேண்டிய 4 விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இந்த நிலையில், இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாகத் திகழும் பெங்களூருக்கு இப்படியொரு நிலைமையா என சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர் அங்குள்ள மக்கள். மழைநீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில், சாலைகள் ஆறுகளாக மாறிவிட்டதாக கேலி செய்யும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதனிடையே, கர்நாடகத்தில் பரவலாக, அதிலும் குறிப்பாக பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு ஊரக மாவட்டங்களிலும், தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றும்(அக். 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்படுமா?

கிழக்கு லடாக்கில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா முன்வந்துள்ளது.சமீப காலங்களில், இந்தியா - சீனா இடையே நடைபெற்று வந்த மோதல்கள் தொடர்பாக... மேலும் பார்க்க

பிரியங்காவை விடச் சிறந்த பிரதிநிதியைக் கற்பனை செய்ய முடியாது: ராகுல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் "தனது சகோதரியை விட சிறந்த பிரநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது" என்று ராகுலி காந்தி தெ... மேலும் பார்க்க

எப்போது கரையை கடக்கிறது டானா புயல்? தயாராகிறதா ஒடிசா?

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், அது அக்டோபர் 24ஆம் தேதி ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் ... மேலும் பார்க்க

ரஷியா சென்றடைந்தார் மோடி!

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.இரண்டு நாள் பயணமாக ரஷியாவின் கசானுக்கு இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு நீதிமன்றம் சம்மன்!

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாகப் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்ப... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் நவம்பர்... மேலும் பார்க்க