செய்திகள் :

நாமக்கல்லில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

post image

நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

சிலை திறப்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் - பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரம் கொண்ட, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.

இந்தச் சிலையை, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.45 மணி அளவில் திறந்து வைத்தார். மேலும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க..: காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்! -ரசிகர்கள் அதிர்ச்சி
நாமக்கல்லில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

அமைச்சர்கள் பங்கேற்பு

கருணாநிதியின் உருவச்சிலை அருகில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலையை அவர் வணங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ரா.ராஜேந்திரன், மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையானது பீடத்துடன் சேர்த்து 12 அடி உயரம் கொண்டதாகும். சிலை திறப்பு விழாவையொட்டி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவுக்கு பின் அவர்கள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சென்றனர்.

இதையும் படிக்க..: லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

போக்குவரத்து மாற்றம்

முதல்வர் வருகையை முன்னிட்டு நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சாலை மார்க்கமாக முதல்வர் வந்தபோது, மல்லூர், ராசிபுரம், புதுச்சத்திரம், புதன்சந்தை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடினார்.

இதையும் படிக்க..: உணவு டெலிவரி செய்து இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்!

தீபாவளியை கொண்டாட சென்னை தயாரா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டுள்ளது.கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜ... மேலும் பார்க்க

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க

ரூ. 9,000 சம்பளம் பெறும் தொழிலாளிக்கு ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி விதிப்பு! என்னதான் நடக்கிறது?

58 வயது முதிர்ந்த பெண் கூலித் தொழிலாளிக்கு, ’ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்’ என வணிக வரித் துறையிடமிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.ஆம்பூர் சுற... மேலும் பார்க்க