செய்திகள் :

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

post image

யூடியூபர் இர்ஃபான் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அவரது மனைவிக்கு சில நாள்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்றை அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த விடியோவில், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தனியார் மருத்துவமனை, பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

மன்னிப்பு கிடையாது

ஏற்கெனவே குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே வெளிநாட்டில் பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து பொது வெளியில் இர்ஃபான் வெளியிட்டதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அப்போது அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பிரச்னை முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“குழந்தையின் தொப்புள் கொடியை அவரே அறுத்தது கண்டிக்கக் கூடியது. மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்று மருத்துவர் அல்லாத நபர், தொப்புள் கொடியை அறுத்தது, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2021 பிரிவு 34-ன் படி மீறப்பட்டுள்ளது.

மருத்துவச் சட்டத்தை மீறியவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்குள் அவரை அனுமதித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் பயிற்சி பெற தடை விதிப்பதற்கான தமிழ்நாடு மருத்துவச் சங்கத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை மன்னிப்பு கேட்டாலும் மன்னிப்பு வழங்கப்படாது. மருத்துவத் துறை சார்பில்தான் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

நாமக்கல்லில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சிலை திறப்புநாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நா... மேலும் பார்க்க

ரூ. 9,000 சம்பளம் பெறும் தொழிலாளிக்கு ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி விதிப்பு! என்னதான் நடக்கிறது?

58 வயது முதிர்ந்த பெண் கூலித் தொழிலாளிக்கு, ’ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்’ என வணிக வரித் துறையிடமிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.ஆம்பூர் சுற... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

டானா புயல் முன்னெச்சரிக்கையாக ஒன்பது துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்கிழக்குப் பருவமழை விடைபெற்றதையடுத்து, கடந்த அக்.15 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங... மேலும் பார்க்க

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் திங்கள்கிழமை(அக்.21) கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், அபூ... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் செவ்வாய்க்கிழமை மாற்றமில்லை. திங்கள்கிழமை விற்பனையான அதே விலையில் இன்றும் விற்பனையாகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, மாற்றமின்றி ஒரு கிரா... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17, 586 கன அடியாக குறைந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 18,094 கன அடி... மேலும் பார்க்க